search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார விலை"

    • குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இதற்கான கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தற்போது, தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் விலை ஆதரவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் வகையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் தென்னை விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய சிவகங்கை மாவட்டத்திற்கு அனுமதி மற்றும் இலக்கீட்டை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.

    இதன்படி சிவகங்கை விற்பனைக் குழு விற்குட்பட்ட சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் 400 மெட்ரிக் டன், சிவகங்கை ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் 100 மெட்ரிக் டன், திருப்புவனம் ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் 50 மெட்ரிக் டன் என மொத்தம் 550 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    இதற்கான கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளால் வழங்கப்பட வேண்டிய அரவைக் கொப்பரையின் தரம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    வைக்கோல், தூசு, நார் போன்ற அயல் பொருட்கள் அதிக பட்சம் 1 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும். பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லு கொப்பரை ஆகியவை அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே இருக்கலாம்.

    விவசாயிகள் தங்களது சிட்டா, பயிர்சாகுபடி அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக விபர நகல்களுடன் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து கொப்பரையை ஒப்படைக்கலாம்.

    அலுவலர்களால் தர ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட கொப்பரை எடையிடப்பட்டு அதற்கான விலை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த கொள்முதல் பணி 1.4.2023 முதல் 30.9.2023 வரை மேற்கொள்ளப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்ட தென்னை விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களிடம் உள்ள கொப்பரையை சிங்கம்புணரி, திருப்புவனம் மற்றும் சிவகங்கை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து விற்று பயனடையலாம்.

    இது குறித்த தகவல்களை பெறுவதற்கு சிங்கம்புணரி- 97862 69851, திருப்புவனம்- 99447 66326 , சிவகங்கை- 70107 92414 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×